மரணத்தின் வாசனை
கொடுமையானது
ஊதுபத்தி, பன்னீர்
ரோஜா மாலை
எல்லாவற்றையும் மீறி
ஒரு அழுத்தனமான வாசனை
இறந்தவரின் மீதிருந்தா
அழுபவர்களின் மீதிருந்தா
பாசமா? பாசாங்கா?
கண்ணீரின் உப்பும்
வலியும் வருத்தமும்
சில குரூர மகிழ்ச்சியும்
வஞ்சனையும்
கலந்து வீசும்
எது அதிகம்
பிரித்தறிய முடியவில்லை
இறந்தவரின் ஆன்மா
எங்கோ ஒரு ஓரத்தில் நின்று
இந்த வாசனையை
நுகர்ந்திருக்கலாம்..
அதன் சதவிகிதத்தை
கண்டறிந்திருக்கலாம்
சொல்வதற்கில்லை..

No comments:
Post a Comment