Saturday, 1 March 2014

சொர்க்கம்

ஜன்னலுக்கு வெளியே
மழை
கம்பளிக்குள் சுருண்டுகொள்ளும்
அதிகாலைப் பொழுதுகள்

# சொர்க்கம்

Sunday, 23 February 2014

பின்னிரவு

மழை பெய்து ஓய்ந்த
பின்னிரவு ஒன்றில்
உன் கைகோர்த்து
நடை பழகும்
தருணம்
சொர்க்கமாகவும்

இருக்கலாம் 

Thursday, 2 May 2013

போய்விடு


என் இறுதி ஊர்வலத்தில்
நிச்சயமாய் கலந்துகொள்ளாதே
சிதறி கிடக்கும்
ரோஜா இதழ்கள் கூட
உன்னை நெருஞ்சி முள்ளாய்
தைத்துவிடும்.

Wednesday, 1 May 2013

விதி


என் விதி
உன்னிடம் சேர்த்தது.
முன் ஜென்ம
பாவமோ புண்ணியமோ..

Tuesday, 29 January 2013

விரக்தி


கொஞ்சம் பொறு
சிந்திவிடாதே
அந்த கடைசி துளி
காதலையும்...

Monday, 21 January 2013

புன்னகை

ஆயிரம் கூர்வாள்
தேவையில்லை
உன் ஒரு
வெட்க புன்னகை 
போதும்
நான் தோற்று விழ

Saturday, 21 July 2012

மரணத்தின் வாசனை


மரணத்தின் வாசனை
கொடுமையானது
ஊதுபத்தி, பன்னீர்
ரோஜா மாலை
எல்லாவற்றையும் மீறி
ஒரு அழுத்தனமான வாசனை
இறந்தவரின் மீதிருந்தா
அழுபவர்களின் மீதிருந்தா
பாசமா? பாசாங்கா?
கண்ணீரின் உப்பும்
வலியும் வருத்தமும்
சில குரூர மகிழ்ச்சியும்
வஞ்சனையும்
கலந்து வீசும்
எது அதிகம்
பிரித்தறிய முடியவில்லை
இறந்தவரின் ஆன்மா
எங்கோ ஒரு ஓரத்தில் நின்று
இந்த வாசனையை
நுகர்ந்திருக்கலாம்..
அதன் சதவிகிதத்தை
கண்டறிந்திருக்கலாம்
சொல்வதற்கில்லை..

Thursday, 19 July 2012

எந்தவொரு செயலையும் 
நாளைக்கு தள்ளிப்
போடுகிறவன் முட்டாள்
அதனால் இன்றே 
உனக்கு
முத்தம் தந்துவிடுகிறேன்..
நாளைக்கும் சேர்த்து....

நானும் ஒரு உயிர்


உரிமைகளை கேட்டால் பெண்ணியவாதி
ஆலோசனை கூறினால் திமிர் பிடித்தவள்..
தன்னம்பிக்கையோடு உலவுகையில் ஆணவம் கொண்டவள்
எனக்கான சுதந்திரம்
நஞ்சுக் கொடியோடு
அறுத்து எறியப்படுகிறது.
நான்
என் சுக துக்கங்களை விட்டுக்கொடுக்கவேண்டும்
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகவேண்டும்
உங்களுக்கு மகிழ்ச்சி தரவேண்டும்
உங்களை காதலிக்கவேண்டும்
உங்கள் காதலை பெற பிரயத்தனப்படவேண்டும்
மீறினால் 
என் பெண்மையும்
கற்பும் சந்தேகத்திற்குள்ளாகும்
காலங்காலமாக பல நூறு
அக்னி பரிட்சைகள்
ராமனைக்காட்டிலும்
எவ்வளவோ உயர்ந்தவன் ராவணன்
எப்போது அறியப்படுவேன்
நானும் ஒரு மனித உயிர் என்று?

Saturday, 11 June 2011

நச்சென்று ஒரு ஹச்


மிளகாய் நெடி தாங்காமல்
உன் சிறிய மூக்கை
கொஞ்சம் சுருக்கி
கண்களை சொருகி
செவ்விதழ் சிறிது திறந்து
ஹச் அல்ல
செம நச்சென்று தும்முகிறாய்
என் அடுத்த கவிதைக்கு
கரு தந்தமைக்கு
இச்சொன்று தருகிறேன்
மிளகாய்க்கு

ஆஹா! நிலா
எவ்வளவு அழகு
என்றாய் நீ
அடடே! யாரிவள்
நம் சொந்தமா
என்று சிந்தித்து
நிலவு

உன் நிழலில்
இருந்து
தான்
ஒளிபெற்றதோ
இந்த நிலவு?
எல்லா
காதல் கவிதைகளும்
ஒன்றுகூடி
வந்தது போல்
இருந்தது
உன் புன்னகை